Friday, October 24, 2008

மணப்பெண் இளவரசி-நாவல் சுருக்கம்



மணப்பெண் இளவரசி (Princess bride) 1973 இல் எழுதப்பட்ட ஒரு விறுவிறுப்பான விந்தை கதை (Fairy tale).
முதலில் கதாசிரியர் வில்லியம் கொல்ட்வெல் தன்னையும் , தன் குடும்பத்தையும் அறிமுகம்
செய்கிறார் . பின்னர் தான் சிறு பிராயத்தில் வாசித்த ,மிகவும் பிடித்த ஒரு புத்தகம் பற்றி பேசுகிறார் .இதன் ஆசிரியர் எஸ் .மார்கன்டேன் .

நிமோனியா ஜுரத்தால் கோல்ட்வெல் நோயுற்று படுக்கையில் கிடந்த நாட்களில் இந்த புத்தகத்திலிருந்து தன் தந்தையார் தனக்கு வாசித்து காட்டிய சாகச கதைகளில் சுவாரஸ்யமான பகுதிகளை இந்த புத்தகத்தில் தொகுத்திருப்பதாக கூறுகிறார்.

உலகின் இருபது சிறந்த அழகிகளில் ஒருத்தியான பட்டர்கப்பின் (buttercup) வாழ்க்கை வர்ணனையுடன் கதை துவங்குகிறது . பெற்றோருடன் பண்ணை ஒன்றில் வாழும் பட்டர்கபுக்கு வெஸ்லி எனும் பண்ணையாள் மேல் காதல் மலர்கிறது

தனது காதலை வெஸ்லியிடம் தெரிவிக்கிறாள் பட்டர்கப் .வெஸ்லி செல்வம் தேடி அமெரிக்கா செல்கிறான் . சிறிது காலம் தொட்டு வெஸ்லி ராபெர்த்ஸ் எனும் கடல் கொள்ளையனால் கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது . மனமுடைந்த பட்டர்கப் தனது வாழ்வில் இனி காதலே இல்லை என முடிவெடுக்கிறாள் .

கதை இப்பொது ஃப்லரின் தேசத்துக்கு தாவுகிறது . ஃப்லரின் (flarin) இளவரசன் ஹம்பர்டின்கின் (hamperdink) திருமண ஏற்பாடுகள் விவரிக்கபடுகிறது . ஹம்பர்டின்க் ஒரு வேட்டை பிரியன் - அபாயகரமான விலங்கு வேட்டையாடி ஃப்லரின் தேசத்து வனங்களிலே பெரும்பகுதி நேரத்தை கழிப்பவன் ஹம்பர்டின்க் . அரசன் லோதரனை வயோதிகம் வருத்த ,ஹம்பர்டின்க் அரசபாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் வருகிறது .ஃப்லரின் அரச பதவிக்கு திருமணமானவர் மட்டுமே தகுதியுடையவர் என்பதால் , ஹம்பர்டின்க்கு பெண் தேட துவங்குகிறார்கள்.


கில்டேர் தேச இளவரசியை பெண் பார்க்கும் படலம் அசந்தர்ப்பத்தில் முடிய ..ரூஜென் பிரபுவின் மூலம் பட்டர்கப்பை சந்திக்கிறான் ஹம்பர்டின்க் .ஹம்பர்டின்க் பட்டர்கபை மணம் புரிய சம்மதம் கேட்கிறான் . இதற்கிடையே ஒரு கடத்தல் கும்பல் பட்டர்கப்பை கடத்துகிறது . அவர்கள் கடல்வழியே கில்டேர் தேசத்தின் கரையோர குன்றுகளுக்கு பட்டர்கப்பை கொண்டு செல்ல , ஒரு கரும்படகு அவர்களை நிழலென தொடர்கிறது .

கில்டேர் கடற்கரையில் நடக்கும் சண்டையில் (வாள் சண்டை , குத்து சண்டை எல்லா வகையும் உண்டு ) கரும்படகில் வந்த கருப்பு அங்கி மனிதன் கடத்தல் கும்பலை சிதறடித்து சாய்க்கிறான் .கும்பலில் இருவர் - இனிகோ , ஃபெஸிக் - மட்டும் தப்புகின்றனர் . கில்டேர் கரையில் பட்டர்கப்புடன் தப்பிக்கும் அந்த மர்ம மனிதன் நெடுநாளாய் கண்மறைந்திருந்த வெஸ்லி என தெரியவருகிறது .

இணைந்த காதலர் ஹமபர்டின்க் கையில் சிக்காதிருக்க வேண்டி பயர்ஸ்வம்ப் (தீக்குழி ) எனும் அபாயம் நிறைந்த வழியில் பயணிக்கிறார்கள் .வெஸ்லி எந்த கடல்கொள்ளயனால் கொல்லப்பட்டதாக கூறபடுகிறதோ , உண்மையில் வெஸ்லி தான் அந்த கடல்கொள்ளயன் என தெரியவருகிறது .

காதலர் இருவரும் பாயர்ஸ்வம்பை தாண்டியதும் அவர்களை ஹம்பர்டின்க் எதிர்கொள்கிறான் .வெஸ்லியை பாதுகாப்பாக அவனது கப்பலில் சேர்ப்பித்தால் ஹம்பர்டின்குடன் வர பட்டர்கப் சம்மதிக்கிறாள் . இணைந்த காதலர் மீண்டும் பிரிகின்றனர் .

ஹம்பர்டின்க் -பட்டர்கப் திருமண நாள் நெருங்குகிறது .
ஹம்பர்டிங்கும் ரூஜென் பிரபுவும் வெஸ்லியை சிறையில் சித்ரவதை சாலைக்குள் அடைத்து துன்புறுத்துகிறார்கள் . பட்டர்கப்போ தனிமையில் வெஸ்லியை நினைத்து ஏங்குகிறாள் .கில்டேர் கரையில் தப்பிய கடத்தல் கும்பலின் இனிகோவும் ஃபெஸிகும் வெஸ்லியை தேடி தீர்க்க திட்டமிடுகிறார்கள் .வெஸ்லி சிறையில் பட்டர்கப்பை நினைத்து வாடுகிறான் .

ஹம்பர்டின்க் பட்டர்கப்பை கொல்ல திட்டமிடுகிறான் . திருமண இரவிலேயே பட்டர்கப்பை கொன்று , கொலை பழியை கில்டேர் தேசத்தின் மீது சுமத்தி அதன் மேல் போர் தொடுப்பது தான் திட்டம் .

பட்டர்கப் வெஸ்லியை பற்றி ஹம்பர்டின்கிடம் விசாரிக்க ஹம்பர்டின்க் உண்மையை மறைக்கிறான் .தனது கடற்படை கப்பல்கள் நான்கினை செலுத்தி வெஸ்லியை தேடி வருவதாக கூறுகிறான் .பட்டர்கப் இத்தனை நம்ப மறுக்கிறாள் . பட்டர்கப்பின் இழிசொல் கேட்டு கொதித்தெழுந்த ஹம்பர்டின்க் சிறையில் உள்ள வெஸ்லியை கொல்ல ஆணையிடுகிறான் …சித்ரவதை இயந்திரந்தில் அகப்பட்டு வெஸ்லி கூக்குரலிடும் ஓசை கேட்டு இனிகோவும் ஃபெஸிகும் சித்ரவதைசாலையை நெருங்குகிறார்கள் . நெளியும் பாம்புகள் ராட்சச வவ்வால்கள் என அதி பயங்கர பிராணிகளின் காவலை மீறி உள்ளே செல்லும் இருவரும் அங்கே வெஸ்லியின் சடலத்தை காண்கிறார்கள் .

வெஸ்லியின் சடலத்தை மிரகிள் மேக்ஸ் (miracle mex) எனும் மந்திரவாதியிடம் எடுத்து செல்கின்றனர் .முதலில் தயங்கினாலும் முடிவில் மந்திரவாதி ஒரு அதிசய மருந்தை தயார் செய்து தருகிறான் .
இனிகொவும் ஃபெஸிகும் கோட்டை சுவர் உச்சிக்கு வெஸ்லியின் சடலத்தை கொண்டு சென்று அங்கிருந்தபடி மருந்தை புகட்ட , வெஸ்லி மீண்டும் உயிர் பெறுகிறான் .
உயிர் பெற்ற வெஸ்லி உடனே அவர்களுடன் சேர்ந்து கோட்டைக்குள் நுழைய திட்டமிடுகிறான் .ஃபெஸிக் தான் மேல் தீ பிழம்புகளுடன் சக்கரங்கள் கட்டியவாறே கோட்டைக்குள் நுழைய ,இனிகோ ரூஜெனை சண்டையிட்டு கொல்கிறான் .ஹும்பர்டிங்கை மணம் செய்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பட்டர்கப் வெஸ்லியை கண்டதும் மலர்கிறாள் .வெஸ்லியின் மிரட்டலில் பயந்து போன ஹம்பர்டிங்கை பட்டர்கப் ஒரு நாற்காலியில் சேர்த்து கட்டுகிறாள் . அப்போது நான்கு வெண்புரவிகளோடு ஃபெஸிக் தோன்ற அவனுடன் இனிகோ வெஸ்லி மற்றும் பட்டர்கப் நால்வரும் கோட்டையிலிருந்து தப்புகின்றனர் …பின் எப்போதும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .
.

No comments: