Friday, October 31, 2008

Friday, October 24, 2008

மன்னனின் மக்கள்-நாவல் சுருக்கம்



1930 களில் வாழ்ந்த ஒரு அமெரிக்க அரசியல் புள்ளியின் வாழ்வையும் தாழ்வையும் சித்தரிக்கும் கதை All the King's Men .Robert pen warren எழுதியது -1947 புலிட்சர் விருது பெற்ற நாவல் .

கதையின் ஒரு நாயகன் வில்லி ஸ்டார்க் (willie stark) . அன்றாடம் காய்ச்சியாய் வாழ்க்கையை தொடங்கும் ஸ்டார்க் மெல்ல உயர்ந்து தனது மாநிலத்தின் ஆளுநர் ஆகின்றான் .பெரும் அதிகார மய்யமாக மாறும் ஸ்டார்க் உருட்டல் மிரட்டல்கள் மூலமே எதிரிகளை அடக்குகிறான் . ஏழை விவசயிகளின் சுமையை குறைக்க வேண்டி செல்வந்தர்களுக்கு பல் வேறு வரிகளை விதிக்கிறான் .
அவனுக்கு பல எதிரிகள் இருந்தாலும் ,தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் சாம் மகமர்பி ஸடார்க்கின் அதிகாரத்தை குறைக்க எப்போதும் திட்டமிடுகிறான் . மேல்தட்டு ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஜாக் பார்தேன் (Jack barden) தான் ஸடார்க்கின் வலது கரம் –கதையின் மற்றொரு நாயகன் ஜாக் .

ஜாக் தனது வரலாற்று ஞானத்தை வைத்து ஸடார்க்கின் எதிரிகளின் ஜாதகத்தையே தயாரித்துத்தர , இதை வைத்து மிரட்டும் ஸ்டார்க் ,எதிரிகளை சுலபமாய் வீழ்த்துகிறான் .நம்பிக்கையற்ற மனபோக்குள்ளவனாய் சித்தரிக்கப்படும் ஜாக் பல விஷயங்களை பாதியிலேயே நிறுத்துகிறான் ,அமெரிக்கா வரலாறு பற்றிய அவனது ஆய்வை அவன் முடிக்கவில்லை ;ஆன் ஸ்டாண்டன் எனும் அவனது முதல் காதலியை மனம் புரிவதில்லை .

ஜாக் தனது குழந்தை பருவம் முதல் தன் வாழ்வில் முன்மாதிரியாக நினைத்திருந்த மனிதரான நீதிபதி இர்வினின் அறையில் சில எலும்புகளை தேட ஸ்டார்க் பணிக்கிறான் .இதனால் ஜாக் மிகுந்த மனகுழப்பதுக்கு உள்ளாகிறான் .முடிவில் நீதிபதி இர்வின் லஞ்சம் பெற்றதும் அதனை அன்றைய ஆளுநர் ஆடம் ஸ்டாண்டன் (ஜாக்கின் காதலியின் தந்தை ) மறைத்ததும் தெரிய வருகிறது …விஷயம் வெளியே வர நீதிபதி தற்கொலை செய்து கொள்கிறார் . இதை வைத்து ஸ்டார்க் விடுத்த மிரட்டலுக்கு பணிந்து ஆடம் ஸ்டாண்டன் ஸடார்க்கின் மருத்துவமனையில் இயக்குனராக சேர்கிறான் .இதன் விளைவாய் ஸ்டாண்டன் மகள் ஆன் ஸ்டான்டனுக்கும் ஸ்டார்கிற்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது . கொதித்தெழுந்த ஆடம் ஸ்டாண்டன் சடார்கை கொலை செய்கிறான் . ஜாக் அரசியலை துறக்கிறான் .

ஸடார்க்கின் மரணமும் அது நடந்த சூழ்நிலையும் ஜாக்கை யோசிக்க வைக்கிறது .ஆன் ஸ்டான்டனை மணம் புரிகிறான் .தனது விட்டு போன அமெரிக்கா வரலாற்று ஆய்வை மீண்டும் தொடர்கிறான் ஜாக்

மணப்பெண் இளவரசி-நாவல் சுருக்கம்



மணப்பெண் இளவரசி (Princess bride) 1973 இல் எழுதப்பட்ட ஒரு விறுவிறுப்பான விந்தை கதை (Fairy tale).
முதலில் கதாசிரியர் வில்லியம் கொல்ட்வெல் தன்னையும் , தன் குடும்பத்தையும் அறிமுகம்
செய்கிறார் . பின்னர் தான் சிறு பிராயத்தில் வாசித்த ,மிகவும் பிடித்த ஒரு புத்தகம் பற்றி பேசுகிறார் .இதன் ஆசிரியர் எஸ் .மார்கன்டேன் .

நிமோனியா ஜுரத்தால் கோல்ட்வெல் நோயுற்று படுக்கையில் கிடந்த நாட்களில் இந்த புத்தகத்திலிருந்து தன் தந்தையார் தனக்கு வாசித்து காட்டிய சாகச கதைகளில் சுவாரஸ்யமான பகுதிகளை இந்த புத்தகத்தில் தொகுத்திருப்பதாக கூறுகிறார்.

உலகின் இருபது சிறந்த அழகிகளில் ஒருத்தியான பட்டர்கப்பின் (buttercup) வாழ்க்கை வர்ணனையுடன் கதை துவங்குகிறது . பெற்றோருடன் பண்ணை ஒன்றில் வாழும் பட்டர்கபுக்கு வெஸ்லி எனும் பண்ணையாள் மேல் காதல் மலர்கிறது

தனது காதலை வெஸ்லியிடம் தெரிவிக்கிறாள் பட்டர்கப் .வெஸ்லி செல்வம் தேடி அமெரிக்கா செல்கிறான் . சிறிது காலம் தொட்டு வெஸ்லி ராபெர்த்ஸ் எனும் கடல் கொள்ளையனால் கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது . மனமுடைந்த பட்டர்கப் தனது வாழ்வில் இனி காதலே இல்லை என முடிவெடுக்கிறாள் .

கதை இப்பொது ஃப்லரின் தேசத்துக்கு தாவுகிறது . ஃப்லரின் (flarin) இளவரசன் ஹம்பர்டின்கின் (hamperdink) திருமண ஏற்பாடுகள் விவரிக்கபடுகிறது . ஹம்பர்டின்க் ஒரு வேட்டை பிரியன் - அபாயகரமான விலங்கு வேட்டையாடி ஃப்லரின் தேசத்து வனங்களிலே பெரும்பகுதி நேரத்தை கழிப்பவன் ஹம்பர்டின்க் . அரசன் லோதரனை வயோதிகம் வருத்த ,ஹம்பர்டின்க் அரசபாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் வருகிறது .ஃப்லரின் அரச பதவிக்கு திருமணமானவர் மட்டுமே தகுதியுடையவர் என்பதால் , ஹம்பர்டின்க்கு பெண் தேட துவங்குகிறார்கள்.


கில்டேர் தேச இளவரசியை பெண் பார்க்கும் படலம் அசந்தர்ப்பத்தில் முடிய ..ரூஜென் பிரபுவின் மூலம் பட்டர்கப்பை சந்திக்கிறான் ஹம்பர்டின்க் .ஹம்பர்டின்க் பட்டர்கபை மணம் புரிய சம்மதம் கேட்கிறான் . இதற்கிடையே ஒரு கடத்தல் கும்பல் பட்டர்கப்பை கடத்துகிறது . அவர்கள் கடல்வழியே கில்டேர் தேசத்தின் கரையோர குன்றுகளுக்கு பட்டர்கப்பை கொண்டு செல்ல , ஒரு கரும்படகு அவர்களை நிழலென தொடர்கிறது .

கில்டேர் கடற்கரையில் நடக்கும் சண்டையில் (வாள் சண்டை , குத்து சண்டை எல்லா வகையும் உண்டு ) கரும்படகில் வந்த கருப்பு அங்கி மனிதன் கடத்தல் கும்பலை சிதறடித்து சாய்க்கிறான் .கும்பலில் இருவர் - இனிகோ , ஃபெஸிக் - மட்டும் தப்புகின்றனர் . கில்டேர் கரையில் பட்டர்கப்புடன் தப்பிக்கும் அந்த மர்ம மனிதன் நெடுநாளாய் கண்மறைந்திருந்த வெஸ்லி என தெரியவருகிறது .

இணைந்த காதலர் ஹமபர்டின்க் கையில் சிக்காதிருக்க வேண்டி பயர்ஸ்வம்ப் (தீக்குழி ) எனும் அபாயம் நிறைந்த வழியில் பயணிக்கிறார்கள் .வெஸ்லி எந்த கடல்கொள்ளயனால் கொல்லப்பட்டதாக கூறபடுகிறதோ , உண்மையில் வெஸ்லி தான் அந்த கடல்கொள்ளயன் என தெரியவருகிறது .

காதலர் இருவரும் பாயர்ஸ்வம்பை தாண்டியதும் அவர்களை ஹம்பர்டின்க் எதிர்கொள்கிறான் .வெஸ்லியை பாதுகாப்பாக அவனது கப்பலில் சேர்ப்பித்தால் ஹம்பர்டின்குடன் வர பட்டர்கப் சம்மதிக்கிறாள் . இணைந்த காதலர் மீண்டும் பிரிகின்றனர் .

ஹம்பர்டின்க் -பட்டர்கப் திருமண நாள் நெருங்குகிறது .
ஹம்பர்டிங்கும் ரூஜென் பிரபுவும் வெஸ்லியை சிறையில் சித்ரவதை சாலைக்குள் அடைத்து துன்புறுத்துகிறார்கள் . பட்டர்கப்போ தனிமையில் வெஸ்லியை நினைத்து ஏங்குகிறாள் .கில்டேர் கரையில் தப்பிய கடத்தல் கும்பலின் இனிகோவும் ஃபெஸிகும் வெஸ்லியை தேடி தீர்க்க திட்டமிடுகிறார்கள் .வெஸ்லி சிறையில் பட்டர்கப்பை நினைத்து வாடுகிறான் .

ஹம்பர்டின்க் பட்டர்கப்பை கொல்ல திட்டமிடுகிறான் . திருமண இரவிலேயே பட்டர்கப்பை கொன்று , கொலை பழியை கில்டேர் தேசத்தின் மீது சுமத்தி அதன் மேல் போர் தொடுப்பது தான் திட்டம் .

பட்டர்கப் வெஸ்லியை பற்றி ஹம்பர்டின்கிடம் விசாரிக்க ஹம்பர்டின்க் உண்மையை மறைக்கிறான் .தனது கடற்படை கப்பல்கள் நான்கினை செலுத்தி வெஸ்லியை தேடி வருவதாக கூறுகிறான் .பட்டர்கப் இத்தனை நம்ப மறுக்கிறாள் . பட்டர்கப்பின் இழிசொல் கேட்டு கொதித்தெழுந்த ஹம்பர்டின்க் சிறையில் உள்ள வெஸ்லியை கொல்ல ஆணையிடுகிறான் …சித்ரவதை இயந்திரந்தில் அகப்பட்டு வெஸ்லி கூக்குரலிடும் ஓசை கேட்டு இனிகோவும் ஃபெஸிகும் சித்ரவதைசாலையை நெருங்குகிறார்கள் . நெளியும் பாம்புகள் ராட்சச வவ்வால்கள் என அதி பயங்கர பிராணிகளின் காவலை மீறி உள்ளே செல்லும் இருவரும் அங்கே வெஸ்லியின் சடலத்தை காண்கிறார்கள் .

வெஸ்லியின் சடலத்தை மிரகிள் மேக்ஸ் (miracle mex) எனும் மந்திரவாதியிடம் எடுத்து செல்கின்றனர் .முதலில் தயங்கினாலும் முடிவில் மந்திரவாதி ஒரு அதிசய மருந்தை தயார் செய்து தருகிறான் .
இனிகொவும் ஃபெஸிகும் கோட்டை சுவர் உச்சிக்கு வெஸ்லியின் சடலத்தை கொண்டு சென்று அங்கிருந்தபடி மருந்தை புகட்ட , வெஸ்லி மீண்டும் உயிர் பெறுகிறான் .
உயிர் பெற்ற வெஸ்லி உடனே அவர்களுடன் சேர்ந்து கோட்டைக்குள் நுழைய திட்டமிடுகிறான் .ஃபெஸிக் தான் மேல் தீ பிழம்புகளுடன் சக்கரங்கள் கட்டியவாறே கோட்டைக்குள் நுழைய ,இனிகோ ரூஜெனை சண்டையிட்டு கொல்கிறான் .ஹும்பர்டிங்கை மணம் செய்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பட்டர்கப் வெஸ்லியை கண்டதும் மலர்கிறாள் .வெஸ்லியின் மிரட்டலில் பயந்து போன ஹம்பர்டிங்கை பட்டர்கப் ஒரு நாற்காலியில் சேர்த்து கட்டுகிறாள் . அப்போது நான்கு வெண்புரவிகளோடு ஃபெஸிக் தோன்ற அவனுடன் இனிகோ வெஸ்லி மற்றும் பட்டர்கப் நால்வரும் கோட்டையிலிருந்து தப்புகின்றனர் …பின் எப்போதும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .
.

Thursday, October 23, 2008

வுதரிங் ஹைட்ஸ்-நாவல் சுருக்கம்




வடக்கு இங்கிலாந்தின் மூர் பிரதேச பின்னணியில் நாவலாசிரியை
எமிலி பிரண்ட் (Emily bronte) நெய்த ஒரு காதல் கதை தான் 'வுதரிங் ஹைட்ஸ்' (Wuthering heights)... ..ட்ராஜெடி வகை நாவல் இது ...ஹித்க்லிஃப் –கேதரின் (heathcliff- Catherine) ஜோடியின் நிறைவேறாத காதல் கதை..இந்த நிறைவேறாத காதல் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னப்படுத்தியதை கூறும் கதை ......

பெருமபகுதி நெல்லி டீன் (கேதரினின் முன்னாள் பணிப்பெண்) வாயிலாக லாக்வுட்டிடம் (நாயகன் ஹித்க்ளிபின் இல்லத்தில் குடியிருப்பவர் ) கூறப்படுகிறது .

இரு இணை பிரியா இதயங்களை நம்முன் நடமாட விட்டு காதல் உணர்வின் ஆழத்தை அழகாய் கண் முன் கொண்டுதருவார் எமிலி பிரண்ட் .

'உதரிங் ஹைட்ஸ்' - இதுதான் நமது நாயகி பிறந்து வளர்ந்த வீட்டின் பெயர் ....என்ஷா குடும்பத்தின் பூர்விக வீடு அது ...நாவலின் பெயரும் இதுதான் ...

என்ஷா வீட்டில் இரு குழந்தைகள் -கேதரினும் அவள் அண்ணன் ஹினட்லியும் .
ஒரு முறை அவளது தந்தை லிவர்பூல் நகர் சென்று திரும்பும்போது ஒரு அனாதை சிறுவனை உடன் அழைத்து வருகிறார் .வீட்டில் உள்ள இரு குழந்தைகளுடன் அனாதை ஹித்க்லிஃப் வளருகிறான்..பெரியவன் ஹினட்லி ஹித்க்லிஃபை வெறுக்கிறான்....இளையவள் கேதரினோ காலப்போக்கில்ஹித்க்ளிபிடம் காதல் கொள்கிறாள்.....ஒரு நேரத்தில் ஹினட்லி தரும் தொல்லைகள் அளவுக்கு அதிகமாக ...அவனது தந்தை அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். இதனால் ஹித்க்லிஃப் மீதான ஹினட்லியின் வெறுப்பு பன்மடங்கு அதிகமாகிறது ...தந்தையின் மரணம் ஹினட்லியை மறுபடி 'உதரிங் ஹைட்ஸ்' இல்லத்துள் கொணர்ந்து சேர்க்கிறது ..
ஹினட்லியின் வெறுப்பும் அசூயையும் சேர்ந்து அவனை வேண்டாத விருந்தாளியாக்கினாலும் , கேதரின் பால் கொண்ட தூய காதலால் கட்டுண்ட ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்சிலேயே தொடர்ந்து வசிக்கிறான்..ஆனால் பக்கத்து ஊருக்கு சென்ற கேதரினோ அங்கே அவள் தங்கிய வீட்டின் கோமானாகிய எட்கர் லிண்டன் எனும் அழகிய வாலிபனால் ஈர்க்கபடுகிறாள்.வருத்தம் தாளாது மனத்துயருடன் ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்ஸை விட்டு வெளியேறுகிறான்.வெளியேறும்போது மீண்டும் ஒருநாள் நிச்சயம் திரும்புவதாக சபதம் மேற்கொள்கிறான்.கேதரின் எட்கர் திருமணம் நடை பெறுகிறது.

மூன்று வருடங்கள் கழிகின்றன ... ஹித்க்லிஃபை பற்றி எந்த தகவலுமில்லை..திடீரென ஒரு நாள் ஹித்க்லிஃப் பெரும் செல்வந்தனாக அந்த ஊருக்கு திரும்ப வருகிறான்.ஹினட்லியை குடிக்கவும் சூதாடவும் செய்து அவனை கடனில் மூழ்கடிக்கிறான்.ஹ்ன்ட்லியின் மரணம் ஹித்க்லிஃபை உதரிங் ஹைட்ஸின் உரிமையாளனாக்குகிறது. ஹித்க்லிஃப் கேதரினை சந்திக்கிறான் .கேதரின் ஹித்க்லிஃப் மேல் கொண்ட காதல் எட்கரை கொதித்தெழசசெய்கிறது ...காதலனுக்கும் கணவனுக்கும் இடையே கலங்கி தவிக்கிறாள் கேதரின் ...ஒரு பெண் குழந்தை பிறக்க பிரசவத்தின் போதே கேதரின் மரணம் அடைகிறாள்.இந்த மரணத்தால் மனம் இறுகிப்போன ஹித்க்லிஃப் மிருகமாய் மாறுகிறான் ... எட்கரை பழி வாங்க எண்ணி அவன் தங்கை இசபெல்லாவை திருமணம் செய்து மிகவும் மோசமாக சித்ரவதை செய்ய...இசபெல்லா இறக்கிறாள்.இது போதாதென தன்னிடம் வளரும் ஹினட்லியின்
மகன் ஹெர்டனையும் தனது சொந்த மகன் (இசபெல்லாவின் மகன்) லிண்டனையும் கொடுமைபடுத்துகிறான். கேதரின் மகள் கேதி அந்த வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறாள்.அவளுக்கும் ஹெர்டனுக்கும் காதல் மலர்கிறது.நிறைவேறாத காதலால் மனம் தவித்து அலையும் ஹித்க்லிஃப், கேத்தரினின் ஆவி தன்னுடன் பேசுவதாக நம்புகிறான் .மூர் பள்ளத்தாக்குகளில் கேத்தரினின் ஆவியை தேடி அலையும் ஹித்க்லிஃப் அங்கேயே மரணம் அடைகிறான்..கேத்தியும் ஹெர்டனும் மணம் புரிந்த பின் 'உதரிங் ஹைட்ஸ்' வீட்டை விட்டு த்ரஷ்கொர்ட் கிராஞ்சு வீட்டுக்கு குடிபெயர்வதுடன் கதை முடிகிறது.-
இப்போதும் வடக்கு இங்கிலாந்தின் மூர் பள்ளத்தாக்குகளில் ஹித்க்லிஃப் -கேதரின் ஜோடிஆவியாக வலம் வருவதாய் ஐதீகம்...

Wednesday, October 22, 2008

Monday, October 20, 2008

ஓசை…


Saturday, October 18, 2008

ஒரு துளி வெயில் …..

சதுரங்கம்

தமிழ்நாடு கொஞ்சம் சூடான ஊர் னு சொன்னா திருச்சி அதிலே இன்னும் கொஞ்சம் சூடான இடம்னு தைர்யமா சொல்லலாம் .
இப்போ நான் திருச்சி வாசி .)
ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் எல்லா திருச்சி வாசிகளையும் போல நானும் மொட்டை மாடியிலே ஒரு அரை மணி நேரமாவது காத்து வாங்கிற பேருலே

a)மேகத்தை கண்ணாலேயே துரத்துறது ,

b)நிலாவுக்குள்ளே சிம்ரன் மூஞ்சி தெரியுதான்னு தேடுறது ,

c)ஸ்டார் எல்லாம் அது அது இடத்துலே சரியா உக்காந்துகிட்டு இருக்கான்னு எண்ணுறது ,

d)பக்கத்து/எதிர் வீட்டு மொட்டை மாடியிலே யார் இருக்கான்னு பார்க்கவே பார்க்காமே இருக்கிறது :-)

இப்படி ஒரு லிஸ்ட்வெச்சிருப்பேன் .

நேரம் போக போக நிக்க விடாத அளவு நம்ம தேசிய பூச்சி (அதாங்க கொசு ) என்னை ஆக்ரமிச்சுடும் . அப்போ எல்லாத்துக்கும் குட் நைட் (நாலாவது வேலை தவிர ..அது நான் செய்யாதது ..ஆமாம் )சொல்லிட்டு நல்லபிள்ளையா கீழே இறங்கி ஜோஜோ தூங்கிடுவேன் .

இந்த மாதிரி ஏதோ ஒரு நாள் , யாரோ என்கிட்டே பேசின மாதிரி ஒரு பிரமை இருந்திருக்குன்னு நினைக்கிறேன் …

உரை நடை +கவிதை கலந்து தான் இருக்கும் …தூய தமிழ் கவிஞர்கள் இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க ...:-)


சதுரங்கம்

கதிர் சாய்ந்த மாலை வேளை …

உணவுக்குப்பின் ஓய்வாக
மொட்டை மாடி தரையில்
சற்றே மல்லாந்த நேரம் ….
மேலே பார்த்தால் தெரிந்த முகம் ….

…வான் மகள் ….

மெலிதாய் ஒரு நகை …
குறும்பாய் ஒரு கண் சிமிட்டல் ….

ஏதோ விளையாட அழைக்கிறாள்
என புரிந்தது ….
என்ன விளையாட்டு ?

யோசிக்கும் முன்
எதிரே துள்ளி விழுந்தது
ஒரு கட்டமிட்ட பலகை

ஒ ……இன்று சதுரங்கம் !!

அவசரமாய் காய்களை தேடினேன்
ஞாபக பைய்யுள்
தேடி துழாவியதில்
எண்ண விரல்களில்
முதலில் சிக்கியது … புன்னகை :-)

புன்னகையுடன் புன்னைகையை
பலகை மேல் நான் வைக்க ….
பதிலுக்கு எதிர்புறம்
அழகாய் சிரித்து
எழுந்தது வைகறை …

சற்றே சஞ்சலத்துடன்
நான் காய் நகர்த்த …
பதிலுக்கு ஒரு கருமுகில் கூட்டம்
வேகமாய் நகர்ந்து
என் பக்கம் வந்தது…

கோபத்தை கோபமாய்
பலகை மேல் நான் நகர்த்த ….
எதிரே ஒரு மூலையில்
பலமாய் இடி முழக்கம் ….

சுட்டு விழி பார்வையையே
அடுத்த காயாய் நான் எடுக்க ….
கீழ்வானை கீறியது
கண் கூசும் மின்னல் ஒன்று

கண்ணீர் எடுத்து நான்
பலகை மேல் வைக்கும் முன்னே …
எதிர்புறம் சோவென
பெய்தது அடை மழை …

என்னவளின் ஊடலை
காயாக நான் வைக்க ….
பதிலுக்கு பலகை மேல்
பிழம்பாய் செங்கதிர் ….

ஆசையாய் காதலுடன்
அடுத்த காயை நான் நகர்த்த ….
வட்டமிட்டு குளிர் பொழிந்தது
நீல வானின் வெள்ளை நிலா ….

வண்ண வண்ண கனவுகளை
அள்ளி நான் எடுத்து வைக்க ….
எதிரே வான் முழுதும்
பொட்டுக்களாய் விண்மீன் கூட்டம் ….

எண்ணத்தை வரிகளில் கோர்த்து
அழகிய கவிதை புனைந்து
பாங்காய் பலகை மேல் வைக்க …..
எதிரே முகில் கூட்டம் விலக்கி
எழுந்தது எழு வண்ண வானவில் ….

அடுத்த காயை தேடி தோல்வியுற்று
தளர்வாய் எழுந்தேன்
பலகை முன்னிருந்து …
‘விட்டுவிடு என்னை …உனை ஜெயிக்க
என்னால் ஆகாது’….

மறுபடி மெலிதாய் ஒரு நகை …
குறும்பு கண் சிமிட்டல் வேறு ….
‘ஏதேனும் இருக்கும் …
இறுதி முயற்சி தான் செய்து பாரேன் ….’

ஏதேனும் காய்கள் தாம் எஞ்சி உள்ளவோ ?
மறுபடி ஞாபக துழாவல் …

அகப்பட்டது ஒரு காய் !
தப்பிக்க இயலாது போல…

மறைந்திருந்த காய் தான் ஏதோ ?
தெரிந்து கொள்ளும் ஆவலில்
அதனை நான் வெளியெடுக்க ….

பார்வை பிடிபடு முன்னரே
வேகமாய் கவிந்து
கண்ணை மறைத்தது
காரிருள்

ஒ …துயில் ….:-)

——–

ஜோடி