Thursday, October 23, 2008

வுதரிங் ஹைட்ஸ்-நாவல் சுருக்கம்




வடக்கு இங்கிலாந்தின் மூர் பிரதேச பின்னணியில் நாவலாசிரியை
எமிலி பிரண்ட் (Emily bronte) நெய்த ஒரு காதல் கதை தான் 'வுதரிங் ஹைட்ஸ்' (Wuthering heights)... ..ட்ராஜெடி வகை நாவல் இது ...ஹித்க்லிஃப் –கேதரின் (heathcliff- Catherine) ஜோடியின் நிறைவேறாத காதல் கதை..இந்த நிறைவேறாத காதல் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னப்படுத்தியதை கூறும் கதை ......

பெருமபகுதி நெல்லி டீன் (கேதரினின் முன்னாள் பணிப்பெண்) வாயிலாக லாக்வுட்டிடம் (நாயகன் ஹித்க்ளிபின் இல்லத்தில் குடியிருப்பவர் ) கூறப்படுகிறது .

இரு இணை பிரியா இதயங்களை நம்முன் நடமாட விட்டு காதல் உணர்வின் ஆழத்தை அழகாய் கண் முன் கொண்டுதருவார் எமிலி பிரண்ட் .

'உதரிங் ஹைட்ஸ்' - இதுதான் நமது நாயகி பிறந்து வளர்ந்த வீட்டின் பெயர் ....என்ஷா குடும்பத்தின் பூர்விக வீடு அது ...நாவலின் பெயரும் இதுதான் ...

என்ஷா வீட்டில் இரு குழந்தைகள் -கேதரினும் அவள் அண்ணன் ஹினட்லியும் .
ஒரு முறை அவளது தந்தை லிவர்பூல் நகர் சென்று திரும்பும்போது ஒரு அனாதை சிறுவனை உடன் அழைத்து வருகிறார் .வீட்டில் உள்ள இரு குழந்தைகளுடன் அனாதை ஹித்க்லிஃப் வளருகிறான்..பெரியவன் ஹினட்லி ஹித்க்லிஃபை வெறுக்கிறான்....இளையவள் கேதரினோ காலப்போக்கில்ஹித்க்ளிபிடம் காதல் கொள்கிறாள்.....ஒரு நேரத்தில் ஹினட்லி தரும் தொல்லைகள் அளவுக்கு அதிகமாக ...அவனது தந்தை அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். இதனால் ஹித்க்லிஃப் மீதான ஹினட்லியின் வெறுப்பு பன்மடங்கு அதிகமாகிறது ...தந்தையின் மரணம் ஹினட்லியை மறுபடி 'உதரிங் ஹைட்ஸ்' இல்லத்துள் கொணர்ந்து சேர்க்கிறது ..
ஹினட்லியின் வெறுப்பும் அசூயையும் சேர்ந்து அவனை வேண்டாத விருந்தாளியாக்கினாலும் , கேதரின் பால் கொண்ட தூய காதலால் கட்டுண்ட ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்சிலேயே தொடர்ந்து வசிக்கிறான்..ஆனால் பக்கத்து ஊருக்கு சென்ற கேதரினோ அங்கே அவள் தங்கிய வீட்டின் கோமானாகிய எட்கர் லிண்டன் எனும் அழகிய வாலிபனால் ஈர்க்கபடுகிறாள்.வருத்தம் தாளாது மனத்துயருடன் ஹித்க்லிஃப் உதரிங் ஹைட்ஸை விட்டு வெளியேறுகிறான்.வெளியேறும்போது மீண்டும் ஒருநாள் நிச்சயம் திரும்புவதாக சபதம் மேற்கொள்கிறான்.கேதரின் எட்கர் திருமணம் நடை பெறுகிறது.

மூன்று வருடங்கள் கழிகின்றன ... ஹித்க்லிஃபை பற்றி எந்த தகவலுமில்லை..திடீரென ஒரு நாள் ஹித்க்லிஃப் பெரும் செல்வந்தனாக அந்த ஊருக்கு திரும்ப வருகிறான்.ஹினட்லியை குடிக்கவும் சூதாடவும் செய்து அவனை கடனில் மூழ்கடிக்கிறான்.ஹ்ன்ட்லியின் மரணம் ஹித்க்லிஃபை உதரிங் ஹைட்ஸின் உரிமையாளனாக்குகிறது. ஹித்க்லிஃப் கேதரினை சந்திக்கிறான் .கேதரின் ஹித்க்லிஃப் மேல் கொண்ட காதல் எட்கரை கொதித்தெழசசெய்கிறது ...காதலனுக்கும் கணவனுக்கும் இடையே கலங்கி தவிக்கிறாள் கேதரின் ...ஒரு பெண் குழந்தை பிறக்க பிரசவத்தின் போதே கேதரின் மரணம் அடைகிறாள்.இந்த மரணத்தால் மனம் இறுகிப்போன ஹித்க்லிஃப் மிருகமாய் மாறுகிறான் ... எட்கரை பழி வாங்க எண்ணி அவன் தங்கை இசபெல்லாவை திருமணம் செய்து மிகவும் மோசமாக சித்ரவதை செய்ய...இசபெல்லா இறக்கிறாள்.இது போதாதென தன்னிடம் வளரும் ஹினட்லியின்
மகன் ஹெர்டனையும் தனது சொந்த மகன் (இசபெல்லாவின் மகன்) லிண்டனையும் கொடுமைபடுத்துகிறான். கேதரின் மகள் கேதி அந்த வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறாள்.அவளுக்கும் ஹெர்டனுக்கும் காதல் மலர்கிறது.நிறைவேறாத காதலால் மனம் தவித்து அலையும் ஹித்க்லிஃப், கேத்தரினின் ஆவி தன்னுடன் பேசுவதாக நம்புகிறான் .மூர் பள்ளத்தாக்குகளில் கேத்தரினின் ஆவியை தேடி அலையும் ஹித்க்லிஃப் அங்கேயே மரணம் அடைகிறான்..கேத்தியும் ஹெர்டனும் மணம் புரிந்த பின் 'உதரிங் ஹைட்ஸ்' வீட்டை விட்டு த்ரஷ்கொர்ட் கிராஞ்சு வீட்டுக்கு குடிபெயர்வதுடன் கதை முடிகிறது.-
இப்போதும் வடக்கு இங்கிலாந்தின் மூர் பள்ளத்தாக்குகளில் ஹித்க்லிஃப் -கேதரின் ஜோடிஆவியாக வலம் வருவதாய் ஐதீகம்...

No comments: