Friday, October 24, 2008

மன்னனின் மக்கள்-நாவல் சுருக்கம்



1930 களில் வாழ்ந்த ஒரு அமெரிக்க அரசியல் புள்ளியின் வாழ்வையும் தாழ்வையும் சித்தரிக்கும் கதை All the King's Men .Robert pen warren எழுதியது -1947 புலிட்சர் விருது பெற்ற நாவல் .

கதையின் ஒரு நாயகன் வில்லி ஸ்டார்க் (willie stark) . அன்றாடம் காய்ச்சியாய் வாழ்க்கையை தொடங்கும் ஸ்டார்க் மெல்ல உயர்ந்து தனது மாநிலத்தின் ஆளுநர் ஆகின்றான் .பெரும் அதிகார மய்யமாக மாறும் ஸ்டார்க் உருட்டல் மிரட்டல்கள் மூலமே எதிரிகளை அடக்குகிறான் . ஏழை விவசயிகளின் சுமையை குறைக்க வேண்டி செல்வந்தர்களுக்கு பல் வேறு வரிகளை விதிக்கிறான் .
அவனுக்கு பல எதிரிகள் இருந்தாலும் ,தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் சாம் மகமர்பி ஸடார்க்கின் அதிகாரத்தை குறைக்க எப்போதும் திட்டமிடுகிறான் . மேல்தட்டு ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஜாக் பார்தேன் (Jack barden) தான் ஸடார்க்கின் வலது கரம் –கதையின் மற்றொரு நாயகன் ஜாக் .

ஜாக் தனது வரலாற்று ஞானத்தை வைத்து ஸடார்க்கின் எதிரிகளின் ஜாதகத்தையே தயாரித்துத்தர , இதை வைத்து மிரட்டும் ஸ்டார்க் ,எதிரிகளை சுலபமாய் வீழ்த்துகிறான் .நம்பிக்கையற்ற மனபோக்குள்ளவனாய் சித்தரிக்கப்படும் ஜாக் பல விஷயங்களை பாதியிலேயே நிறுத்துகிறான் ,அமெரிக்கா வரலாறு பற்றிய அவனது ஆய்வை அவன் முடிக்கவில்லை ;ஆன் ஸ்டாண்டன் எனும் அவனது முதல் காதலியை மனம் புரிவதில்லை .

ஜாக் தனது குழந்தை பருவம் முதல் தன் வாழ்வில் முன்மாதிரியாக நினைத்திருந்த மனிதரான நீதிபதி இர்வினின் அறையில் சில எலும்புகளை தேட ஸ்டார்க் பணிக்கிறான் .இதனால் ஜாக் மிகுந்த மனகுழப்பதுக்கு உள்ளாகிறான் .முடிவில் நீதிபதி இர்வின் லஞ்சம் பெற்றதும் அதனை அன்றைய ஆளுநர் ஆடம் ஸ்டாண்டன் (ஜாக்கின் காதலியின் தந்தை ) மறைத்ததும் தெரிய வருகிறது …விஷயம் வெளியே வர நீதிபதி தற்கொலை செய்து கொள்கிறார் . இதை வைத்து ஸ்டார்க் விடுத்த மிரட்டலுக்கு பணிந்து ஆடம் ஸ்டாண்டன் ஸடார்க்கின் மருத்துவமனையில் இயக்குனராக சேர்கிறான் .இதன் விளைவாய் ஸ்டாண்டன் மகள் ஆன் ஸ்டான்டனுக்கும் ஸ்டார்கிற்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது . கொதித்தெழுந்த ஆடம் ஸ்டாண்டன் சடார்கை கொலை செய்கிறான் . ஜாக் அரசியலை துறக்கிறான் .

ஸடார்க்கின் மரணமும் அது நடந்த சூழ்நிலையும் ஜாக்கை யோசிக்க வைக்கிறது .ஆன் ஸ்டான்டனை மணம் புரிகிறான் .தனது விட்டு போன அமெரிக்கா வரலாற்று ஆய்வை மீண்டும் தொடர்கிறான் ஜாக்

No comments: