Wednesday, November 5, 2008

சிரிக்க வைக்கும் தவறுகள் - நாவல் சுருக்கம்


இரட்டையர் கதைகள் கேள்விப்படிருகிருக்கிறீர்களா? நம்ம ஊர் உத்தமபுத்திரன் தொடங்கி தாய் சொல்லை தட்டாதே ,அவங்க ஊர் ‘யாதோன் கி பராத்' அப்புறம் இப்போ லேட்டஸ்டா ஜீன்ஸ் ,இருவத்துமூணாம் புலிகேசி வரை எல்லா இரட்டையர் கதைக்கும் தாத்தா கதை இந்த 'காமெடி ஆப் எர்ரர்ஸ்' Comedy of Errors (ஷேக்ஸ்பியர்).

எப்பவும் தெளிவா பேசற ஆசாமி கிட்டே இந்த கதையை சொல்லுங்க . கதை கேட்ட அப்புறம் அவர் எப்பிடி பேசறார்னு என்கிட்டே சொல்லுங்க 

எபிசாஸ் , சைரக்யூஸ் ரெண்டு ஊருக்கும் ரொம்ப நாளா தீராத பகை . ரெண்டு ஊருக்கும் மத்திலே மூச்சு -பேச்சு கிடையாது ,ஒட்டு -உறவு கிடையாது ,போக்கு -வரவு கிடையாது ..ஒண்ணுமே கிடையாது .

அதை மீறி எஜியன் எஜியான்னு ஒரு ஆசாமி சைரக்யூசிலே இருந்து எப்பிடியோ எபிசாஸ் உள்ளே போய்டறான் . அங்கே அந்த ஊர் போலீசு அவனை ‘லபக் ’குனு பிடிச்சு உள்ளே போட்டுடறாங்க .ஆயிரம் பொற்காசு குடுக்கலேன்னா அவனுக்கு சங்கு ஊதிடரதுன்னு தீர்ப்பாகுது . பயந்து போன எஜியான் அவன் சொந்த கதை சோக கதையை எப்சிசாஸ் ராஜா சலினாஸ் கையிலே சொல்லி புலம்பறான் .

விஷயம் இததான் .எஜியானுக்கு ரெண்டு பசங்க –ரெட்டை பிறவி - ஒன்னு போலவே இருப்பாங்களே … அந்த ரெட்டை பிறவி .இந்த ரெட்டை பசங்களுக்கு ரெண்டு வேலைக்கார பசங்க .அவங்களும் ரெட்டை பிறவி (ஆனாலும் ஷேக்ஸ்பியருக்கு குறும்பு ஜாஸ்தி). சின்ன வயசுலே இவங்க குடும்பம் பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு கப்பலே டூர் போறப்போ கடல்லே கப்பல் கவுந்து எஜியான் ஃபாமிலி ரெண்டு பாதியா பிரிஞ்சு போய்டுது ,அப்பா + ஒரு மகன் தனியாவும் அம்மா +இன்னொரு மகன் தனியாவும் இப்படி ரெண்டா பிரிஞ்சு தனித்தனியா காணாம போய்டறாங்க .
அப்போலேர்ந்து அப்பாவும் புள்ளையும் காணாம போன அம்மாவையும் இன்னொரு புள்ளையையும் ஊர் ஊரா தேடறாங்க .அப்பிடி தேடி எபிசசுக்கு வர இப்படி எக்கச்சக்கமா மாட்டிகிட்டான் எஜியான்

.இந்த செண்டிமெண்ட் கதை ராஜாவை உருக்கி உளுந்தெடுத்திரிச்சு .எஜியான் மேல ரொம்ப பீலிங்க்சான ராஜா அவன் தப்பிச்சுக்க தேவையான ஆயிரம் பொற்காசு கொண்டு வந்து குடுக்க ஒரு நாள் டைம் குடுக்கிறான் .

இது இப்படி இருக்க எஜியான் புள்ளை ஆண்டிபோலசும் அவன் வேலைக்காரன் த்ரோமியோவும் தொலைஞ்சவங்களை தேடிக்கிடே அப்பிடியே எபிசாசுக்கே வந்து சேர்றாங்க .
உண்மையிலே இவங்க தேடற அந்த இன்னொரு புள்ளை எபிசசிலேயே பெரிய ஆளா பிசினஸ்லாம் பண்ணி கொழிசுக்கிட்டு இருக்கான் - அவன் பேறும் ஆண்டிபோலஸ் தான் (ஆனாலும் எஜியானுக்கும் குறும்பு ஜாஸ்திங்க ஹி ஹி ) .

கதை முடியரப்போ நம்ம தலைலே கொஞ்சநஞ்சம் முடி மிச்சம் இருக்கணும் இல்லையா ...அதனால இந்த ரெண்டு பிள்ளயாண்டனையும் ஒருத்தனை ச்ய்ரக்யூசின் ஆண்டிபோலஸ் (எஸ் .ஆண்டிபோலஸ் -அப்பா புள்ளை ) , இன்னொருத்தனை எபிசசின் ஆண்டிபோலஸ் (ஈ .ஆண்டிபோலஸ் -அம்மா புள்ளை )னு சொல்லுவோம் . ஒகேவா .

ஈ .ஆண்டிபோலஸ் பொண்டாட்டி பேர் அட்ரியானா . பஜாரிலே வழிலே எஸ் .ஆண்டிபோலசை பார்க்கிறா அட்ரியானா . பார்த்து அவன் தான் புருஷன்னு தப்பா கணக்கு பண்ணிக்கிட்டு ,அவனை ‘வீட்டுக்கு வந்தா தான் ஆச்சு ’னு வம்பு பண்ணி தர தரன்னு இழுத்துட்டு வந்துருது அந்த பொண்ணு .பத்தாததுக்கு வாசல்லே காவலுக்கு வேலைக்கரனையும் (எஸ் .ட்ரோமயோ ) நிப்பாட்டி வெக்கிறா மகராசி . அப்போ பார்த்து ஈ .ஆண்டிபோலஸ் (அதான் நிஜ புருஷன் ) வீட்டுக்கு வர,,வேலைக்காரன் அவனை உள்ளே விட முடியதுங்க்றான்

இன்னாடா இது நம்ம வீட்லயே நமக்கு இப்படி ஒரு அல்வானு குழம்பறான் ஈ .ஆண்டிபோலஸ்
இந்த அட்ரியானா பொண்ணுக்கு லூசியானா லூசியானா னு ஒரு தங்கச்சி .
அந்த பொண்ணு வேற கிளி மாறி அளாகா இருக்குதா , அந்த வீட்டிலே போயி மாட்டிகிட்ட எஸ் .ஆண்டிபோலஸ் சைக்கிள் கேப்ல நைசா லூசியானா கிட்டே லவ்ஸ் விடறான் .இன்னாடா இது , நம்ம அக்கா புருஷன் நம்ம கைலே ஒரு டைப்பா ராங்கடிக்கராறேன்னு லூசியானா பொண்ணு பேஜாரய்டரா .

இத்துக்கு நடுவுலே ஈ .ஆண்டிபோலஸ் செய்ய சொல்லி ஆர்டர் குடுத்த ஒரு கோல்டு செய்னை நகைகடைகாரவுங்க ஜரூரா எஸ் .ஆண்டிபோலஸ் கையலே கொண்டு குடுத்து அவங்க பங்குக்கு குழப்பறாங்க . குடுத்த கையோடே மறுநாள் ரொம்ப தெளிவா ஈ .ஆண்டிபோலஸ் கிட்டே பில்லோட பாய் நகைக்கடைக்கார பையன் நிக்க , ஈ .ஆண்டிபோலசுக்கு தலையும் புரியல்லே வாலும் புரியல்லே .’நான் தான் இன்னும் நகையே வாங்கலையேனு’ அவன் கேக்க ,’அப்போ நேத்து நகை வாங்காம புகையா வாங்கினே ’னு இவன் சொல்ல ஒரே ரசாபாசமாய்டுது .நகைகடைகாரவுங்க சும்மா உடுவாங்களா ? போலீசுல போய் இன்னா மேட்டேருன்னு விலாவாரியா சொல்லி விட ,ரெண்டு தொப்பி மாமா வந்து ஈ .ஆண்டிபோலஸ் அண்ணாத்தேய உள்ளார போட்டு கம்பி பின்னாலே கணக்கு கத்துக்க உட்டுடுறாங்க

எஸ் .ஆண்டிபோலசை கதற கதற கேக்காம வீட்டுக்கு இழுத்து வந்தாளே அட்ரியானா,அவளுக்கு அவன் பேருலே ஒரே சந்தேகம் .இன்னடா நம்ம புருஷன் கொஞ்ச நாளாவே ஒரு டைபாவே நடக்குராநேனு யோசனையாவே இருக்கு …மண்டைய போட்டு குடாஞ்சாலும் என்ன எது ஒன்னும் பிடிபட மாட்டேங்குது அவளுக்கு ….மொத்தத்திலே அவனுக்கு புத்திதான் கொஞ்சம் கலங்கிடுசுன்னு அட்ரியானா முடிவுக்கு வர்றா … வீட்லே கடேசி கடேசிலே இருக்குமே ஒரு குடௌன் ரூமு , அதுக்குள்ளே நம்ம எஸ் .ஆண்டிபோலசை அடிச்சு பூட்டிடுரா .

இப்படி அட்ரியானா அடிக்கிற லூட்டியிலே மாட்டிகிட்டு நொந்து போன எஸ் .ஆண்டிபோலஸ் எபிசாஸ் ஊருக்கே கிறுக்கு பிடிச்சு போச்சுன்னு முடிவுக்கு வர்றான் .ஒரு நாள் சொல்லாமே கொள்ளாமே நைசா அவன் வேலைக்காரன் எஸ் .த்ரோமியோவையும் இழுத்துகிட்டு அட்ரியானா கையிலே இருந்து எஸ்கேபாயி பக்கத்திலே ஒரு சத்திரம் சாவடியிலே போயி ஒண்டிக்கறான் . சாவடியிலே குந்தினு கீற தன்னோட புருஷனை சேர்த்து வெக்க சொல்லி அட்ரியானா பொண்ணு ராஜா கிட்டே போயி கேட்டுகிறா .

அதுக்குள்ளே போலீசில மாட்டிக்கிட்ட நிஜ புருஷன் ஈ .ஆண்டிபோலஸ் நேக்கா அவங்களுக்கு அல்வா குடுத்துட்டு ராஜா முன்னே வந்து நிக்கறான் .'இந்த அட்ரியானா பொண்ணு பண்ற அநியாயத்தே கேளுங்க ராசா ..சொந்த புருஷனையே வூட்டாண்டை சேர்க்க மாட்டேன்கிறானு' கத்தறான் .

அப்போ சத்திரம் சாவடி முதலாளி எமிலியம்மா எஸ்.ஆண்டிபோலசை ராஜா கிட்டே கூட்டி வர்றாங்க . இன்னாடா இது ஒரே போலே ரெண்டு மன்சனுங்கனு எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம் . நல்லா பார்த்துகோங்க சனங்களேன்னு ரெட்டை பிறவியையும் பக்கம் பக்கமா நிக்க வெச்சு காட்டி எல்லார் குழப்பத்தையும் தீர்த்து வெக்கிறா அந்த புண்ணியவதி ., இந்த எமிலியம்மா யாருன்னு நினைச்சீங்க .அவதான் இந்த ரெட்டையையும் பெத்த அம்மா .

அப்புறம் என்ன ..... ஈ .ஆண்டிபோலஸ் அவன் பொண்டாட்டியோட சேர்ந்துக்கிறான் .எஜியானை ராஜா மன்னிச்சு விட்டுடறார் ரிலீஸ் ஆன கையோட அவனும் ரொம்ப நாள் தொலஞ்சு கெடைச்ச அவன் பொண்டாட்டி கிட்டே போய் சேர்ந்துக்கிறான் .எஸ் .ஆண்டிபோலஸ் பழையபடி லூசியயனாவுக்கு ரூட் போட ஆரம்பிக்கறான் . பிரிஞ்சு சேர்ந்த இன்னொரு ரெட்டை பிறவி - அதாங்க , வேலைக்கார அண்ணன் -தம்பி ஈ .ட்ரோமயோ எஸ் .ட்ரோமயோ - ரெண்டும் ஒண்ணை ஒண்ணு கட்டி பிடிச்சு கண்ணீர் விட்டு ஒரே பீலிங்க்சாறாங்க .
அப்படியே கொசுவர்த்தி சுருள் ஸ்லோமோஷன்ல சுத்துது
க்லோசப்பிலே ரெண்டு வளையல் போட்ட கை ஒண்ணா சேர்ந்து வணக்கம் சொல்லுது
ஸ்க்ரீனை நல்லா இழுத்து மூடி சுபம் போடறாங்க

2 comments:

கார்த்திகா said...

Hollywood story-kku Chennai senthamil dubbing-a? But little long to read, I think. :)

Ponnarasi Kothandaraman said...

Thanks for dropping by...You have a nice blog... And good intro 2 the books too...
Trichy la ulla idangala pathi oru post podungalen :) Wud b interesting. Trichy being my parents native neraya edam pathathey illa :(