Sunday, November 2, 2008

இரண்டாம் ரிச்சர்ட்-நாவல் சுருக்கம்




அரச குடும்பங்களில் ஒன்றான லங்கஸடர் குடும்பம் பிரிட்டிஷ் அரியணையை கைப்பற்றிய கதை கூறும் ஷேக்ஸ்பியர் நாடகம் தான் இரண்டாம் ரிச்சர்ட் (Richard II ) . இதன் தொடர்ச்சி நாடகங்கள் என ஹென்றி IV, Parts 1 & 2, மற்றும் ஹென்றி V இவற்றை கூறலாம்
ப்லாண்டஜனட் (plantagenet) குடும்பத்தின் கடைசி வாரிசான ரிச்சர்ட் II இன் வீழ்ச்சியின் பதிவாகவும் அவனை வீழ்த்தி அரியணை ஏறிய லங்கஸடர் குடும்பத்தின் ஹென்றி IV இன் வளர்ச்சியின் பதிவாகவும் இந்த நாடகம் உள்ளது .
இளவயதில் அரியணை ஏறிய இரண்டாம் ரிச்சர்ட் தவறான வழிகாட்டும் நண்பர்களால் மக்களையும் தேசத்தையும் மறக்கிறான் . அயர்லாந்துடன் தேவையற்ற போர் ,இத்தாலிய கலைப்பொருள் சேகரிப்பு என ஊதாரிதனமாய் செலவழிக்கும் ரிச்சர்ட் அதற்காக பொதுமக்கள் கட்டும் வரிகளை பன்மடங்கு கூட்டுகிறான்

காசுக்கு ஆசைப்பட்டு அரச நிலத்தை சில பிரபுக்களிடம் விற்கிறான் ரிச்சர்ட் . ரிச்சர்டின் மாமா ஒருவர் (மக்களின் மரியாதை பெற்றவர் ) இறந்துவிட ,அவரது நிலத்தையும் அவனே கைப்பற்றுகிறான் .

இப்படி அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பையும் ஒருங்கே சம்பாதிக்கிறான் ரிச்சர்ட் .நிற்க .
இறந்த மாமாவுக்கு ஒரே பிள்ளை – ஹென்றி பலிங்க்ப்ரக் (henry balinbroke). நற்குணங்களினால் வெகுஜனங்களின் பிரியத்துக்கு பாத்திரமானவன் ஹென்றி . ஒரு அரசியல் கொலை எழுப்பிய தீராத சர்ச்சையை காரணம் காட்டி ஹென்றியை ஆறு ஆண்டுகள் நாடு கடத்தி விடுகிறான் ரிச்சர்ட் .இது ஹென்றியின் தந்தை மரணத்துக்கு முன்னரே நடந்து விடுகிறது .

தனக்கு சேர வேண்டிய சொத்தை ரிச்சர்ட் அபகரித்துவிட்ட செய்தியை கேட்ட ஹென்றி கொதித்தேழுகிறான் .இந்த நேரத்தில் ரிச்சர்ட் அயர்லாந்துக்கு போர் செய்ய புறப்பட ,ஹென்றி ஒரு படையை திரட்டி வந்து இங்கிலாந்தை தாக்குகிறான் .

ஹென்றி பலிங்க்ப்ரக் மேல் பிரியம் கொண்ட பொதுமக்கள் திரண்டு வந்த படையை வரவேற்று அதனுடன் தாங்களும் இணைகிறார்கள் . ஹென்றியின் படை லண்டனை நோக்கி முன்னேறுகையில் பிரபுக்கள் ஒவ்வொருவராய் ரிச்சர்ட் பக்கமிருந்து ஹென்றி பக்கம் தாவிவிட , போர் புரியாமலேயே வெற்றி பெரும் பலிங்க்ப்ரக், நான்காவது ஹென்றியாக இங்கிலாந்தின் அரியணை ஏறுகிறான் . ரிச்சர்டை கைது செய்து வடக்கு இங்கிலாந்தின் பமஃப்ரெட் கோட்டையில் ஹென்றி சிறைஎடுக்கிறான் . அங்கு ஒரு கொலைகாரன் ரிச்சர்டை கொன்று விட , கொலைக்கு பொறுப்பேற்க மறுக்கும் ஹென்றி , பாவத்தை களைய ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதுடன் நாடகம் முடிகிறது

No comments: